நடுரோட்டில் வாலிபரை அரிவாளால் வெட்டிய கொடூரம் - கோவையில் பரபரப்பு.!
man arrested for murder in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரணவ் என்ற இளைஞர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று காலை மக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில் நின்று தனது தோழியுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவன் பிரணவை வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையிலும் இறங்கினர். இதற்கிடையே, கொலை செய்த நபர் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் சரணடைந்துள்ளார். இதையடுத்து அந்த நபர் சிங்காநல்லூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் பேரரசு என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால், இந்தக் கொலை எதற்காக நடந்தது என்பது தெரியவில்லை. இருப்பினும், காதல் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. பட்டப் பகலில் 17 வயது சிறுவன் சக மாணவனை வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for murder in coimbatore