அரியலூரில் ரேஷன் கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல் - வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அருகே உல்லியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன் 37 வயதான இவர் நாச்சியார் பேட்டை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்

இந்த நிலையில் நேற்று இந்த நியாய விலை கடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்தும், முகாம் நடைபெறும் நாள் குறித்தும் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நீலமேக மகன் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் அந்த பேனரை கிழித்துள்ளார்.

மேலும், முத்துசெல்வனை தகாத வார்த்தைகளால் பேசி, கல்லால் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துச்செல்வன் உடையார்பாளையம் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for attack ration shop employee in ariyalur udaiyarpalaiyam


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->