17 வயது சிறுமி கடத்தல்..!! காமுகனை போக்சோவில் கைது செய்தது காவல்துறை..!!
Man arrested due to kidnaping young girl
17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டது காவல்துறை.
விசாரணையில், சிறுமி தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை அபிமணி என்ற இளைஞருடன் பழகி வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சிறுமி அவருடன் சென்றுள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், அபிமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை.
English Summary
Man arrested due to kidnaping young girl