அரசியலுக்கு விரைவில் அழைத்து, ரஜினி ரசிகர்கள் போஸ்டர்.. மதுரையில் ஆரம்பம்.!
Madurai Rajini Supports Poster
சென்னையில் வைத்து நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழக இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பின்னர் அரசியலுக்கு வருவேன் என்றும், அரசியலில் இப்போது மாற்றம் இல்லை என்றால், எப்போதும் இல்லை " என்று தெரிவித்தார்.
அந்த சமயத்தில் இருந்து, ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரது தலைமையில் கட்சி ஆரம்பித்து அரசியல் பிரவேசத்தை துவங்குவார் என்று கூறி வந்தனர். இந்த நிலையில், ரஜினியை அரசியலை மையப்படுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில், நல்லவர் பின்னால் நாடே வரும். எம்.ஜி.ஆர் ஆட்சியை தர விரைந்து வாரீர் என்று ஒட்டப்பட்டு இருந்தது. இதனைக்கண்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், இது போன்ற போஸ்டரை ஒட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், மதுரையில் கடவுள் நிந்தனை ஒழியட்டும்.. ஆன்மீக ஆட்சி மலரட்டும்... ஆன்மீக பெரியாரின் ஆட்சி மலரட்டும்.. இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை என்று கூறி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Rajini Supports Poster