மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.! முன்பதிவு விவரங்கள் இதோ..!
Madurai Meenakshi Amman Thirukkalyanam booking starts on April 22
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு வருகின்ற 22-ந் தேதி தொடங்குகிறது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா வருகின்ற 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 4 வரை நடக்கிறது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
இதில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் வருகின்ற மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருக்கல்யாண உற்சவத்தை காணவரும் பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 200 மற்றும் ரூபாய் 500 கட்டணச் சீட்டு வசதியும், தெற்கு கோபுரம் வழியாகக் கட்டணமில்லா தரிசன வசதியும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான முன்பதிவுக்கு, வரும் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் திருக்கல்யாண உற்சவத்தில் காண வரும் பக்தர்கள், https://hrce.tn.gov.in, https://maduraimeenakshi.hrce.tn.gov.in/ என்ற இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Madurai Meenakshi Amman Thirukkalyanam booking starts on April 22