சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு - துணை ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனு ஒத்திவைப்பு.!
madurai hc adjourned inspector ragu ganesh bail plea in sathankulam murder case
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு - துணை ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனு ஒத்திவைப்பு.!
கடந்த 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உள்ளிட்டோரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாகத் தாக்கி இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட காயத்துடன் சிறையில் அவதிப்பட்ட அவர்களை காவலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், துணை காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மூன்று ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றம், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் துணை காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்த போது நீதிபதி இந்த மனு குறித்து சி.பி.ஐ. போலீசார் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, இந்த விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
English Summary
madurai hc adjourned inspector ragu ganesh bail plea in sathankulam murder case