பட்டப்பகலில் மருமகன் செய்த காரியம்.! மாமனாருக்கு ஏற்பட்ட விபரீதம்.!
madurai district murder
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் பஸ்நிலையம் அருகே நடந்து சென்ற மாமனாரை, மது போதையில் வந்த மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை அளிக்குறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள அலங்கம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கையா. இவரது மகள் தனலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நல்லமணி என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழுகிறார்கள் இதனால் விவாகரத்து கேட்டு மேலூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைக்காக இன்று காலை மேலூர் வந்த தங்கையா பஸ் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு குடித்துவிட்டு வந்த மருமகன் நல்லமணி, திடீரென்று தங்கையாவை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் தங்கையா நடுரோட்டில் அதே இடத்தில் உயிரிழந்தார். இதைப்பார்த்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் ஓடி வந்து, நல்லமணியை பிடித்துக்கொண்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், நல்லமணியை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.