கள்ளக்காதல் பிரச்சனையில் கொலை.. பழிக்கு பழியாக நடந்த சம்பவம்?.. மதுரையில் பரபரப்பு.!
Madurai Bridge Basha Murdered by Gang Police Investigation
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இளைஞரை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கொலைகாரனை, நடுரோட்டில் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மகபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஷா. கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கள்ளக்காதலியின் மகனான கிருஷ்ணன் என்ற இளைஞரை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வழக்கில் இவர் கைதானார்.
அப்போதிலிருந்து இவனை பிரிட்ஜ் பாஷா என்று மக்கள் அழைத்து வந்த நிலையில், இவனின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையிலிருந்து வெளியே வந்த பாஷா, அங்குள்ள மகபூப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளான்.
இந்நிலையில், நேற்று இரவு கடையின் வாசலில் நின்று கொண்டிருந்த பாஷாவை, 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே பாஷா பலியாகினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Bridge Basha Murdered by Gang Police Investigation