#Breaking: விஷாலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..! ரூ.29.29 கோடி கடன்.. சிக்கித்தவிக்கும் நடிகர்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்யுமாறு விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல நடிகரும், தயாரிப்பாளனுமான விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்கு கோகுலம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ₹.29.29 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடனை லைக்கா தயாரிப்பு நிறுவனம் ஏற்று கடனை செலுத்தியது.

இந்த கடனை ஏற்று செலுத்துவதற்காக நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையில் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த கடனை செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையையும் லைக்கா நிறுவனத்திற்கு தான் கொடுக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் கடனை முழுதும் திருப்பி தராமல் நடிகர் விஷால் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கை இன்று உயர் நீதிமன்றம் விசாரித்த நிலையில், விஷாலின் முழு சொத்து விபரங்களை தாக்கல் செய்ய கோரி இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras High court about Actress Vishal and Lyca Case


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->