மர்மமான முறையில் வீடுபுகுந்து பெண் செய்த காரியம்.! சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி.!
madhurandhagam cctv shocking video
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே வீட்டின் கூரையை மர்மமான முறையில் பெண் ஒருவர் கொளுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
மதுராந்தகத்தை அடுத்த வில்லிப்பாக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் என்பவர் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டை மர்ம நபர்கள் தொடர்ந்து 5 முறை தீ வைத்து கொளுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இது அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்றமாதம் இதுகுறித்து சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால், இந்த புகாரை காவல்துறையினர் வாங்க மறுத்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் மர்ம நபர் வீட்டை கொளுத்திவிட்டு சென்றுள்ளார். இந்த தீயில் பெரும்பாலான வீடுகள் பற்றி எரிந்து சாம்பலாகின.
இந்நிலையில், அமிர்தத்தின் வீட்டிற்கு பின்புறம் சிசிடிவி கேமராவை வைத்துள்ளார். அந்த கேமராவில் நேற்று இரவு 12 மணியளவில் கூரையை கொளுத்தும் வீடியோ காட்சி பதிவாகி இருக்கின்றது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
madhurandhagam cctv shocking video