துண்டு சீட்டு தவறா!! ஜெயலலிதா பேப்பர் பண்டலையே வச்சி படிச்சப்போ புடுங்கிட்டு இருந்தீங்கலா? தோசை நாயகன் அதிரடி!!
madhimaran says about jayalalitha thundu seettu
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பின் திமுகவை அரசியலில் தக்கவைக்கும் முக்கிய பொறுப்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். கருணாநிதியின் இறப்பிற்கு முன்பிருந்தே ஸ்டாலின் பல மேடைகளை பார்த்திருந்தாலும் அவரது இறப்பிற்கு பின் மேடைகளை தவிர்க்க முடியாத சூழலுக்கு அவர் ஆளாகினார்.
இந்நிலையில், அவர் அடிக்கடி மேடைகளில் ஏதாவது பழமொழியை தவறாக பேசியோ அல்லது வாக்கியங்களை மாற்றி கூறியோ அன்றைய இணையதளத்தில் தவிர்க்க முடியாத தடத்தை #டேக் மூலம் பிடித்து விடுவார்.
இந்த வரிசையில், ஸ்டாலின் பழமொழிகள், ஸ்டாலின் உளறல்கள் என்று பல்வேறு டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருக்கும். இந்நிலையில் அவர் மேடையில் துண்டு சீட்டு வைத்து பேசுவதையும் பலர் இணையத்தில் கிண்டலடிப்பது வழக்கம்.
திராவிட கழகத்தை சேர்ந்த மதிமாறன் ஏற்கனவே தோசையில் சாதி இருப்பதாக பேசி பிரபலமடைந்த இவர் ஸ்டாலின் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ' துண்டுச் சீட்டு வைத்துப் பேசுகிறார் ஸ்டாலின் என்கிறார்கள். அப்படி பேசுவதில் என்ன தப்பு?
ஜெயலலிதா பேப்பர் பண்டலையே வச்சிக்கிட்டு செய்தி வாசிச்சப்ப, என்ன புடுங்கிக்கிட்டா இருந்தீங்க என்று திமுக காரர்கள் திரும்ப கேட்டா, என்ன பண்ணுவிங்க?' என கேட்டுள்ளார்.
English Summary
madhimaran says about jayalalitha thundu seettu