6 வருட காதல்.. ஒன்று சேர முடியாததால் ஒன்றாக தூக்கில் தொங்கிய காதலர்கள்.! - Seithipunal
Seithipunal


தாம்பரம் அருகே ஆறு வருடமாக காதலித்தவர்கள் ஒன்று சேர முடியாததால் இருவரும் ஒன்றாக தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பீர்க்கன்காரணை பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராமன். இவரும் யுவராணி என்ற பெண்ணும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் யுவராணிக்கு அவரது வீட்டில் திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று ஜெயராமன் வீட்டில் யுவராணியும், ஜெயராமனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lovers suicide in Tambaram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->