மார்ச் 14ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் மார்ச் 14ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 10ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 18-ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. அதன் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் புதுச்சேரியில் மார்ச் 14ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LKG & UKG schools starts in March 14 in Pudhuchery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->