பாலத்தில் இருந்து தவறி பள்ளத்தில் விழுந்த கூலி தொழிலாளி பலி
Laborer dies after falling from bridge in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் பாலத்தில் இருந்து தவறி பள்ளத்தில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராஜாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வரதராஜன் (70). இவரது மனைவி சின்னப்பாபு. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வரதராஜன் கடந்த மூன்று மாதங்களாக நாரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியை சேர்ந்த அவரது தம்பி முருகேசன் என்பவர் வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை நாரைக்கிணறு பிரிவு சாலை அருகே உள்ள சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்திருந்த வரதராஜன், நிலை தடுமாறி பாலத்திலிருந்து 15 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த வரதராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த ஆயில்பட்டி போலீசார், வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Laborer dies after falling from bridge in namakkal