திராவிட கட்சிகளுக்கு பாஜகவை பார்த்து பயம் - பரப்பரப்பைக் கிளப்பிய குஷ்பு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- 

"மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு நிதியைப் பெறுகிறது. ஆனால் திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை. எனவே, இங்கிருந்து அனைத்து பா.ஜ.க. வேட்பாளர்களும் நாடாளுமன்றத்திற்கு சென்றால்தான் பிரதமரின் அனைத்து திட்டங்களும் மக்களிடம் சென்றடைய முடியும்.

தேர்தலில் நாங்கள் யாரையும் போட்டியாக பார்க்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பா.ஜ.க.வை போட்டியாக பார்க்கின்றன. தமிழகத்தில் பா.ஜ.க. இல்லவே இல்லை என்று சொன்ன இரண்டு திராவிட கட்சிகளும் இன்று பா.ஜ.க.வைப் பார்த்து பயப்படும் அளவிற்கு பா.ஜ.க. வளர்ச்சி அடைந்துள்ளது" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kushboo speech in election campaighn


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->