#சென்னை || வீடுபுகுந்து கத்திமுனையில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.!  - Seithipunal
Seithipunal


குன்றத்தூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை, கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் 22 வயது உடைய மூன்றாவது மகள் சென்னை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவம் நடந்த அன்று வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தனியார் கல்லூரி மாணவி உறங்கிக்கொண்டிருந்த அறையில் இரவு நள்ளிரவு 2 மணி அளவில் அறையின் கதவை யாரோ தட்டுவது போல் கேட்டுள்ளது.

இதனால் யார் கதவை தட்டுவது என்று மாணவி எழுந்து கதவைத் திறந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் அறையின் உள்ளே நுழைந்து கல்லூரி மாணவியை கத்திமுனையில் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீட்டின் பின்புறம் மரத்தின் வழியாக அந்த மர்ம நபர் தப்பி சென்றுள்ளார்.

இது குறித்து அந்த மாணவி தனது சகோதரியிடம் தெரிவிக்கவே, மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். குன்றத்தூர் பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KUNDRATHUR COLLEGE GIRL ABUSED


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->