இரயில் நிற்பதற்குள் அவசரம்.. கும்பகோணம் இரயில் நிலையத்தில் இளைஞருக்கு காத்திருந்த அதிஷ்டம்.!
Kumbakkonam Railway Station Jan Shatabdi Express Passenger Luckily Rescued
இரயில் பயணி ஒருவர் ரயிலில் இருந்து கீழே இறங்குகையில், தவறிவிழுந்து நூலிழையில் உயிர்தப்பிய புகைப்பட காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கும்பகோணத்தில் நடைபெற்றுள்ளது.
கோயம்புத்தூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி விரைவு இரயில், கும்பகோணம் இரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. இதன்போது, கும்பகோணம் இரயில் நிலையத்தில் இறங்க தயாரான பயணி ஒருவர், இரயில் நிற்பதற்குள் வாசல்படியில் இருந்து கீழே காலை வைத்துள்ளார்.
இரயில் நிற்பதற்குள் பயணி செய்த அவசர அலட்சிய காரணத்தால், அவர் தவறி கீழே விழ சென்றுள்ளார். இதனைகவனித்துக்கொண்டு இருந்த இளைஞர் ஒருவர், கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றி புத்திமதி கூறி அனுப்பி வைத்துள்ளார்.
ஓடும் பேருந்தில் அல்லது வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது என்று பல விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், இரயில் பயணங்களில் பயணிகள் இதுபோன்ற விபரீத சாகசங்களில் ஈடுபடுவது, இரயில் நிற்பதற்கு முன்னதாகவே ஏற மற்றும் இறங்க முயற்சிப்பது உயிரிழப்பை ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kumbakkonam Railway Station Jan Shatabdi Express Passenger Luckily Rescued