ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி: பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி (வயது 38) இவரது மனைவி மகாலட்சுமி (வயது 33) இவர்களுக்கு குருமூர்த்தி (வயது 16), குரு பிரசாத் (வயது 15) என்ற 2 மகன்களும் ரிஷபஸ்ரீ (வயது 13) என்ற ஒரு மகள் உள்ளனர். 

பூபதி அதே பகுதியில் சொந்தமாக டைலர் கடை வைத்து பணியாற்றி வருகிறார். மேலும் இவர் தீபாவளி சீட்டு நடத்தி நஷ்டம் அடைந்ததால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே ரூ. 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். 

கடன் கொடுத்தவர்கள் மற்றும் சீட்டு கட்டியவர்கள் அவரது பணத்தைக் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததால் அவருக்கு சொந்தமான காலி இடத்தை விற்று பணம் கொடுக்குமாறு அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி இடம் கேட்டுள்ளார். 

ஆனால் அதற்கு கிருஷ்ணமூர்த்தி மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த பூபதி குடும்பத்துடன் காரிமங்கலம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் பூச்சி மருந்து குடித்துள்ளனர். 

அந்த வழியாக சென்றவர்கள் மயங்கிய நிலையில் இருந்தவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக காரியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயக்கம் அடைந்த நிலையில் இருந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடன் தொல்லை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnangiri family members attempt suicide


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->