கோவை | பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்த ஓட்டுநர் கைது! - Seithipunal
Seithipunal


அன்னூர் அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் தவறான முறையில் ஈடுபட்ட பேருந்தின் ஓட்டுநர் கைது:

கோவை மாவட்டம்: அன்னூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (வயது 24). இவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி துறையில் முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார். 

இவர் வேலை பார்க்கும் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் செல்வார். இளம்பெண் வழக்கம் போல் நேற்று காலை பேருந்தில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர் செல்வதற்காக அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறினார். 

அப்போது அந்த பேருந்தை ஓட்டிச்சென்ற சிறுமுகையை சேர்ந்த ஓட்டுநர் (வயது 35). இவர் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் தவறான முறையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் பேருந்து அன்னூருக்கு சென்றதும், உடனடியாக பேருந்தை விட்டு இறங்கி, நேராக அன்னூர் காவல் நிலையம் சென்று நடந்ததை தெரிவித்து ஓட்டுநர் மீது புகார் அளித்துள்ளார். 

போலீசார் புகாரின் பேரில் ஓடும் பேருந்தில் பயணிக்க வந்த இளம்பெண்ணிடம் தவறான முறையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு டிரைவரை கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai bus harassment case driver arrest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->