அம்மம்பள்ளி அணையில் நீர்திறப்பு... திருத்தணி கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பருவமழைக்காலமானது தற்போது துவங்கி முடிவுபெறும் நிலையில் உள்ளது. வரும் மாதங்களில் தமிழகம் மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெரும் என்ற அறிவிப்பு அடுத்துதடுத்து வெளியாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையமும் வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீரை வழங்கி வரும் மழையும் அதிகளவு பெய்து வருவதால், ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனைப்போன்று சென்னையின் மற்றொரு நீர் ஆதாரமாக பூண்டி நீர்த்தேக்கம் இருக்கிறது. பூண்டி நீர்தேக்கத்திற்கு கொசஸ்தலை ஆறு மூலமாக நீர் வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் - திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டம் பகுதிகளை சார்ந்த கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 950 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kosasthalaiyar River Border Peoples warning about Flood


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->