கடலூர் மாவட்ட பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து, 9  பேர் பலி.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குறுங்குடி கிராமம் மற்றும் கண்டமங்கலம் கிராமங்களில் பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த  பட்டாசு ஆலையில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் திருமண விசேஷங்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்களின் விழாக்களுக்கு, பிறந்தநாளுக்கு, கோயில் திருவிழாக்களுக்கு, துக்க காரியங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

மேலும் தீபாவளி பண்டிகைக்கு இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகளை சுற்றுப்புற கிராம மக்கள் தேடிவந்து ஆலைகளில் பட்டாசு வாங்குவது வழக்கம்.

இந்த நிலையில், காட்டுமன்னார்கோவில் குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த 9 பேர் பலி என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெடி விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளை துவங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kattumannarkudi fire accident nine members died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->