கொலையா? தற்கொலையா?..! மனைவியின் சடலம் அருகே போதையில் உறக்கம்..! கரூரில் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


மனைவி உயிரிழந்த நிலையில் பிணமாக கிடைக்க, கணவன் போதையில் உறங்கிய சம்பவம் நடந்துள்ளது. 

கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் காசா காலனி பகுதியை சார்ந்தவர் மாலதி. இவர் கடந்த 6 வருடத்திற்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் பாடலூரை சார்ந்த தனசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 4 வயதுடைய ஆஷித் என்ற மகன் இருக்கிறார். 

மாலதி மாயனூரில் இருக்கும் தாய் தமிழரசியின் வீட்டில் மகனுடன் வசித்து வந்துள்ளார். தந்கசேகரன் வேலூர் மாவட்டத்தில் உள்ள போதை ஒழிப்பு மையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், தனசேகரன் தனது மகன் மற்றும் மனைவியை பார்க்க மாயனூருக்கு வந்துள்ளார். 

நேற்று, வீட்டில் கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவரும் நிலையில், அதிகளவு போதையில் இருந்த தனசேகரன் படுத்து உறங்கியுள்ளார். காலை நேரத்தில் சிறுவன் ஆஷித்தின் அழுகுரல் கேட்கவே, அருகே இருந்தவர்கள் சென்று பார்க்கையில் மாலதி பிணமாக இருந்துள்ளார். 

அருகில் தனசேகரன் உறங்கிக்கொண்டு இருக்கவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போதையில் இருந்த தனசேகரனை எழுப்பி விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Woman Mystery Death Police Investigation Husband Sleeps Near wife Body Drunken Alcohol


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->