சிறுவனை சீரழித்த இளைஞர்... காட்டில் அலறிய சிறுவன்.. அரங்கேறிய பாதக செயல்..!
karur student abused by man
கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவர் கடந்த ஆண்டு பள்ளி முடித்து வீடு திரும்புகையில், அதே பகுதியில் மினிபேருந்தில் கண்டக்டராக இருக்கும் பிரதீப் என்னும் 21 இளைஞன் ஒருவன், அந்த சிறுவனை வழிமறித்து பேசியுள்ளேன். பின்னர், அவருக்கு வெளிநாட்டு சாக்லேட் தருகிறேன் என்று அழைத்துள்ளார்.
அந்த சிறுவனும் நம்பி அந்த இளைஞருடன் சென்றுள்ளான். அப்போது, அவன் அந்த சிறுவனை அங்குள்ள காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு அந்த சிறுவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். /மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார். பின்னர், வெளியில் தெரிந்து விடும் என்ற பயத்தில் சிறுவனை கொலை செய்து அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளான்.
இந்த நிலையில் பள்ளி சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராத காரணத்தினால், அவரது பெற்றோர்கள் எல்லா இடத்திலும் தேடியும் கிடைக்காத காரணத்தினால், போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில் சிறுவன் எம்ஜிஆர் நகர் வாய்க்கால் அருகே உள்ள சீத்தைகாட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இதை தொடர்ந்து, குற்றவாளியான பிரதீப்பை கைது செய்து அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதம் கட்ட தவறினால் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
English Summary
karur student abused by man