பச்சிளம் குழந்தையை கையில் வைத்து கதறியழுத தாய்.. கணவன் வீட்டு முன்பு தர்ணா போராட்டம்.!
Kanyakumari Woman Dharna Protest at Husband House with Child
கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கூறி பெண்மணி குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சோகம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியல் அருகே இருக்கும் கிளத்தூர் பகுதியை சார்ந்தவர் விபின் ஸ்டாலின். இவரது மனைவி மேரி மெர்லின். இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய குழந்தை உள்ளது. தம்பதிகளுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.
கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதனையடுத்து, விபின் ஸ்டாலினுக்கு சொந்தமான வீட்டில் மேரி மெர்லின் தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று விபின் ஸ்டாலின் தாய் மற்றும் சகோதரி மேரி மெர்லின் வசித்து வந்த வீட்டிற்கு வந்து, அவரை குழந்தையுடன் வெளியேற்றி இருக்கின்றனர். இதனால் செய்வதறியாது திகைத்த மேரி, கணவர் வீட்டு முன்பு குழந்தையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த விஷயம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விபின் ஸ்டாலினின் உறவினரான காவல் உதவி ஆய்வாளர் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மேரி மெர்லின் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanyakumari Woman Dharna Protest at Husband House with Child