#தக்கலை: காதல் திருமணம் செய்த ஜோடி, காவல் நிலையத்தில் தஞ்சம்..!
Kanyakumari Love Married Couple Surrender on Thuckalay Police Station
கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பனவிளை பகுதியை சார்ந்தவர் ஜினுமோல் (வயது 22). இவர் தக்கலை அருகேயுள்ள மூளகுமூடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் எம்.ஏ பயின்று வருகிறார்.
சம்பவத்தன்று, வீட்டில் இருந்து கோவிலுக்கு செல்வதாக கூறி புறப்பட்ட பெண்மணி, நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் அவரை தேடியும் காணாததால், தக்கலை காவல் நிலையத்தில் பெற்றோர்கள் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஜினுமோல் வாலிபருடன் தக்கலை காவல் நிலையத்திற்கு வந்து தஞ்சம் அடைந்தார். காவல்துறையினரின் வ்சிரணையில், அவர் திருவிதாங்கோடு பகுதியை சார்ந்த விஷ்ணு (வயது 24) என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். இதனையடுத்து, இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் பெண் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த சூழலில், பெண் தனது காதோலருடன் தான் செல்வேன் என அடம் பிடிக்கவே, அவர் காதல் கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanyakumari Love Married Couple Surrender on Thuckalay Police Station