அன்பான கணவனுக்கு மனைவியால் அரங்கேறிய சோகம்.. ஆணுறுப்பு சிதைந்து, மண்டை பிளந்து அரங்கேறிய பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கேசவ திருப்புரம் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கணேஷ். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறார். காயத்ரி வீட்டிற்கு அருகே இருக்கும் ப்ளே ஸ்கூலில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக நள்ளிரவு நேரத்தில் கணேஷ் படுக்கையறையில் உறங்குகையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கொடூர கொலை முயற்சி செய்து தப்பி சென்றது. 

கணேஷின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணேசனை மருத்துமனையில் அனுமதி செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், வீட்டில் மனைவி உறக்கத்தில் இருக்கும் போது, கதவை திறந்து கணேசனை எப்படி வீடுபுகுந்து கொலை செய்துள்ளனர் என்பது தொடர்பான விசாரணையில் மனைவி சிக்கியுள்ளார். இதன் பின்னணியில் காதல் விவகாரம் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட காயத்ரி, திருமணத்திற்கு முன்னதாக அங்குள்ள யாசின் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் அவரது பெற்றோருக்கு தெரியவந்ததை தொடர்ந்து, கணேஷ்குமாருக்கு காயத்ரியை திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்குப் பின்னரும் யாசினுடன் காதலை தொடர்ந்து வந்துள்ளார். காயத்ரியுடன் தடையில்லாமல் யாசின் உறவாட, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே பிளே ஸ்கூல் ஒன்றே தொடங்கத் திட்டமிட்டு இருக்கிறார். 

யாசினிடம் பிளே ஸ்கூல் நடத்த போதிய பணம் இல்லாத காரணத்தால், கணவரின் பெயரில் இருக்கும் வீட்டு பத்திரத்தை எடுத்து, தனது அண்ணனுக்கு உதவுவதாக கூறி அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இதன்படி, பிளே ஸ்கூல் யாசினால் தொடங்கபட்டதை தொடர்ந்து, அங்கு ஆசிரியையாக காயத்ரியும் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் ஊர் ஊராக சுற்றி வந்த நிலையில், வீட்டு பத்திரத்தை மீட்க இயலாமல் போயுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக காயத்ரியின் அண்ணனிடம் கணவன் கேட்க முயற்சிக்கையில், பல காரணங்களை கூறி அதனை கேட்க விடாமல் தடுத்துள்ளார். தனது கணவன் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலுக்கு பிரச்சனை வரும் என்பதாலும், வீட்டில் அடமானம் வைத்த வீடு தொடர்பான பிரச்சினையில் மாட்டிக் கொள்வோம் என்பதாலும் தனது கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். 

இந்த கொலைக்கு யாசினிடம் ஏற்கனவே ரூ.50 ஆயிரம் கடன் பெற்று இருந்த கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார் என்பவரை அழைத்து, ரூ.2 லட்சம் பணம் கொடுத்து கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், சம்பவத்தன்று நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த கணவனைக் கொலை செய்ய மனைவியே உதவி செய்வததும், கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது போல ஏற்பாடு செய்ய, ஆணுறுப்பை சிதைத்து சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக விஜயகுமாரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், காயத்ரி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari illegal affair love murder case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->