பிரதமரின் ரூ.15 இலட்சத்தில், முதற்கட்டமாக ரூ.25 ஆயிரம்.. உங்களுக்கும் போன் வருகிறதா?.. மக்களே உஷார்..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் உவைஸ். இவர் கடந்த பத்து வருடங்களாக பத்மநாபபுரம் நகராட்சி கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அவரது அலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. 

மறுமுனையில் பேசிய நபர் தன்னை வங்கி அதிகாரி என்று அறிமுகப்படுத்திய நிலையில், பிரதமர் மோடி கூறிய சுவிஸ் வங்கியில் இருந்து கருப்பு பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள்ளது என்றும், அதிலிருந்து உங்களுக்கு படிப்படியாக 15 லட்சம் போடப்படும் என்றும், முதல் கட்டமாக ரூ.25 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், தங்களின் வங்கி விபரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறிய நிலையில், இதற்கு பதிலளித்த உவைஸ், " எனக்கு மையவாடி வங்கியில் கணக்கு உள்ளது " என்று கேலியாக பதில் செய்துள்ளார். மையவாடி என்றால் மயானம் என்று அர்த்தம் இது தெரியாத அந்த போலி வங்கி அதிகாரி, அதுவும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தானே என்று திருப்பி கேட்டுள்ளார். இந்த கேள்வி கேட்டதும், உவைஸின் பேச்சில் உள்ள வித்தியாசத்தை அறிந்த போலி வங்கி அதிகாரி இணைப்பை துண்டித்துள்ளார். 

இதனைப்போன்று தக்கலை பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவரின் அலைபேசிக்கு தொடர்பு கொள்கையில், அவரது மனைவி அந்த அழைப்பை எடுத்துள்ளார். மறுமுனையில் பேசிய பெண், தன்னை வங்கி அதிகாரி என்று கூறி, மேற்கூறிய அதே கதையை கூறி முதற்கட்டமாக ரூ.35 ஆயிரம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட மணிகண்டனின் மனைவி, அந்த பெண்ணை தாறுமாறாக பேசிவிட்டு போனை துண்டித்துள்ளார். இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை என்றும் அப்பகுதி மக்கள்  தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Fake Bank Call Fraud Troll


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->