#Breaking: நாளை கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.!
Kanyakumari District School Leave on 18 Oct 2021 due to Rain Announced by Collector Arvind IAS
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதியாக அமைத்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மழை தொடங்கும் பகுதி என்பதால், கேரள மாநிலத்தில் மழை பெய்யும் போது, கன்னியாகுமரி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்யும். இதனால் அங்குள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கேரள மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை பெய்து, அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழைக்கு தற்போது வரை அம்மாவட்டத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு திங்ட்கிழமையான (18.10.2021) நாளை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை - வெள்ளம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanyakumari District School Leave on 18 Oct 2021 due to Rain Announced by Collector Arvind IAS