தம்பி இறந்த சோகத்தில், அண்ணனும் உயிரிழந்த பரிதாபம்.. கடன் தொல்லையால் குடும்பமே நிலைகுலைந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 41). இவர் கார் ஓட்டுநராக இருந்து வருகிறார். ஸ்ரீகண்டனுக்கு சொந்தமான கார் உள்ள நிலையில், இதனை தக்கலை காவல் நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மற்றொரு புதிய கார் வாங்கியுள்ளார். 

இதனால் ஸ்ரீகண்டனுக்கு கடன் ஏற்படவே, இதனை செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டு, மனைவியும் தகராறு செய்து இருக்கிறார். கடன் தொல்லை மற்றும் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஸ்ரீகண்டன் மனமுடைந்து இருந்துள்ளார். 

நேற்று இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற ஸ்ரீகண்டன், வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி அலறவே, இதனைக்கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ஸ்ரீகண்டனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

மருத்துவமனையில் ஸ்ரீகண்டனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் ஸ்ரீகண்டனின் அண்ணன் மணிகண்டனுக்கு தெரியவரவே, மருத்துவமனைக்கு சென்று தம்பியின் உடலைக்கண்டு கதறியழுத மணிகண்டன் மயங்கி விழுந்துள்ளார். 

உடனடியாக அவரை மருத்துவர்கள் மீட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தருணத்தில் உயிரிழந்த அண்ணன் - தம்பி இருவருக்கும் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களின் உடலைக்கண்டு உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருவரின் மறைவுக்கும் தக்கலை பகுதி வாடகை ஓட்டுனர்கள் கறுப்புக்கொடி கட்டி துக்கத்தை வெளிப்படுத்தினர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Brother Suicide and Death due to Loan Torture 30 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->