7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. காஞ்சிபுரத்தில் கொடூரம்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் புத்தள்ளி காலனி பகுதியை சார்ந்தவர் சங்கர். இவரது மகன் ரஞ்சித். இதே பகுதியில் 7 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியிடம் சாக்லேட் வாங்கி கொடுப்பதாக காமுகன் ரஞ்சித் ஆசை வார்த்தை கூறியுள்ளான். 

இதனையடுத்து விபரீத புரியாத சிறுமி காமுகனுடன் செல்லவே, அங்குள்ள முட்புதர் பகுதிக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தயவு செய்து பாதுகாப்புடன் கண்காணியுங்கள். அறிமுகம் இல்லாத நபர்கள் தனியாக அழைத்து செல்ல முயற்சித்தால், அவர்களுடன் செல்ல கூடாது என்பதையும் எடுத்து கூறுங்கள். இது போன்ற காமுகனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மக்கள் கண்ணீர் கோரிக்கை வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram 7 year child sexual abuse police arrest culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->