கனல் கண்ணனுக்கு 26 ஆம் தேதிவரை சிறை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த 1ஆம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசுகையில், "ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்" என்று பேசி இருந்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சேதப்படுத்தியதால் கலவரம் ஏற்பட்ட நிலையில் இவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.

மேலும், சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது .

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யவே, கனல் கண்ணன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்தது.

இதனையடுத்து கனல் கண்ணன் தலைமறைவாகினார் என்று சொல்லப்பட்ட நிலையில், இன்று காலை கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட கடல் கண்ணனுக்கு வருகின்ற 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலின் கீழ் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanal kannan jain in 26 aug


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->