தினம்தினம் அதிகரிக்கும் நோய்த்தொற்று.. தமிழகத்தில் கொரோனாவால் திணறும் மாவட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நேற்று 3645 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3645 பேருக்கு கொரோனா உறுதியானது. தமிழ்நாட்டில் 2ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 74,000ஐ தாண்டியது. சென்னையில் மட்டும் நேற்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,500ஐ தாண்டியது. தமிழ்நாட்டில் நேற்று 1,358 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 46 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு ஒரு உறுதியான நிலையில், அம்மாநிலத்தில் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jun 27 corona update in thiruvarur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->