கோலாகலமாக தொடங்கியது தமிழர்களின் வீர விளையாட்டு!! உற்சாகத்தில் மக்கள்!!
Jallikattu Sports Started
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.
அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி - அவனியாபுரம், 16ம் தேதி - பாலமேடு, 17ம் தேதி - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில், தச்சங்குறிச்சியில் 14ஆம் தேதி, வடமலை புதூரில் 18ஆம் தேதி, கீழப்பனையூரில் 19ஆம் தேதி, விராலிமலையில் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.
அங்காகங்கே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது .
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது.
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், மதுரை காவலன் ஆப், யு டியூப், ஃபேஸ்புக் லைவில் ஜல்லிக்கட்டை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Jallikattu Sports Started