நெடுஞ்சாலைத்துறை விருந்தினர் மாளிகையில் ஐ.டி ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, அவருடைய உறவினர்கள், திமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நெடுஞ்சாலை துறை விருந்தினர் மாளிகையில் 4 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேபோன்று இன்று காலை முதல் அப்பாசாமி மற்றும் காசா கிராண்ட் ஆகிய கட்டுமான நிறுவனங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITraid at Highway Department guest house


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->