சாலை ஆய்வாளர் பணிக்கு ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சாலை ஆய்வாளர் பணிக்கு ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையைச் சேர்ந்த அமுதவாணன் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராமசாமியாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "கடந்த ஜனவரி மாதம் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. 

இதற்கான தகுதியாக கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் நாங்கள் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்று உள்ளதால், சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தோம். ஆனால் இந்த பணிக்கு சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்தவர்கள் தான் தகுதியானவர்கள் என்று கூறி, அந்த கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை விதிமுறைகளின் படியும், அரசு ஊழியர்கள் சட்டத்தின் படியும் சட்டவிரோதமானது. இதனால் எங்களை போன்ற பலரின் அரசு வேலை கனவாகவே போய்விடுகிறது.

ஆகவே சட்டப்படி ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சாலை ஆய்வாளர் பணி வழங்கவும், பொறியியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் பணி நியமனத்தை பொருத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என்று விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். 

இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதால் இது ஏற்புடையதல்ல. அதனால், கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்து சான்றிதழ் பெற்றுள்ள மனுதாரர்கள் தான் சாலை ஆய்வாளர் பணிக்கு விதிமுறைகளின்படி தகுதியானவர்கள். ஆகவே அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITI complete certificate compulsary for road inspector job madurai high court order


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->