ஜூலை 10ல் மீண்டும் முற்றுகை போராட்டம்... இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் இருக்கும் ஊதிய வேறுபாடுகளைச் சரிசெய்யக் கோரி கடந்த டிசம்பர் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அந்தப் போராட்டத்தின் பொழுது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஈரோட்டில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக அரசு பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்த்த வேண்டும். ஏழு ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வை உடனே வழங்கிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தரக் கோரி வரும் ஜூலை 10 ஆம் தேதி பள்ளி கல்வி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Intermediate teachers union announced protest on july10


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->