செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சுயட்சை வேட்பாளர்.. கொலை மிரட்டல் விடுப்பதாக பரபரப்பு குற்றசாட்டு..!
Independent candidate attempted suicide
கொலை மிரட்டல் விடுப்பதாக சுயட்சை வேட்பாளர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள், சுயட்சைகள் என பல முனை போட்டி நிலவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் 1-வது வார்டில் சரவணமூர்த்தி என்ற சுயட்சை வேட்பாளர் போட்டி ஈடுகிறார்.
இந்நிலையில், தனக்கு மற்ற சுயட்சை வேட்பாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
அவரை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சுயட்சை வேட்பாள்ர தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Independent candidate attempted suicide