குடியால் சிதைந்த குடும்பம்.! காதல் கணவனின் கொடூரம் தாங்காமல்., 20 நாட்களில் கணவனை கொளுத்திய பெண்..!! வாழ்க்கை?..!!
in vilupuram girl killed her husband due to drinks activity
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகேயுள்ள டி.வி.நகர் பகுதியை சார்ந்தவர் சேதுபதி (வயது 24). இவர் புதுச்சேரியில் இருக்கும் பஞ்சர் கடையில் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டின் அருகே வசித்து வந்த முருகவேணி (வயது 19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தங்களின் காதலை பரிமாறிக்கொண்டு காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக இரண்டுபேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண நிகழ்விற்கு பின்னர் இருவரும் அங்குள்ள கூரை வீட்டில் வசித்து வந்துள்ளனர். சேதுபதிக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்., நேற்று மாலை நேரத்தில் சேதுபதி வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
வீட்டின் காதவானது வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்த நிலையில்., வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. வீட்டினுள் உறங்கிக்கொண்டு இருந்த சேதுபதி அலறவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். இந்த சமயத்தில்., காற்றும் வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து வீட்டினுள் சென்று பார்த்த சமயத்தில்., சேதுபதி உடல் கருகிய நிலையில் பிணமாக இருந்துள்ளார். இவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
வீடானது தீப்பற்றி எறிந்த சமயத்தில் சேதுபதியின் மனைவி வீட்டில் இல்லை என்பதை அறிந்த காவல் துறையினர் முருகவேணியை சந்தேகித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., இருவருக்கும் இடையே திருமணம் முடிந்த நாட்கள் முதல் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த தகராறு தினமும் தொடர்ந்து வந்த நிலையில்., ஆத்திரமடைந்து கணவரை கொலை செய்ய முருகவேணி திட்டமிட்டுள்ளார்.
அவரின் திட்டப்படி சேதுபதி மது அருந்தி விட்டு வீட்டில் வந்து உறங்கிக்கொண்டு இருந்த சமயத்தில்., கணவரின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீயை வைத்து விட்டு., கதவையும் வெளியே பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். தீப்பற்றி எரிந்ததால் சேதுபதியும் உடல் கருகி பலியாகி., வீடும் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in vilupuram girl killed her husband due to drinks activity