நாலும் பெண் குழந்தைகள்... என்ன செய்ய என்று எண்ணிய தாயாருக்கு தோன்றிய விபரீத சிந்தனை..! பிஞ்சுகளுக்கு நேர்ந்த சோகம்.!!
in vellore mother killed baby court order jail
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகேயுள்ள பெருமாள்குப்பம் கொல்லைமேடு பகுதியை சார்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவியின் பெயர் சத்யா (வயது 23). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து., லத்திகா என்ற 7 வயது குழந்தையும்., ஹாசினி என்ற மூன்றரை வயது குழந்தையும்., பிறந்து ஒன்றரை மாதங்கள் ஆன பெண் குழந்தையும் இருந்துள்ளது.
வெங்கடேசன் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவர்களுக்கு பிறந்த அனைத்து குழந்தைகளும் பெண்ணாக இருந்ததால்., ஆண் குழந்தைக்காக தவித்துள்ளனர். இதனால் இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்த தருணத்தில்., கடந்த 2016 ஆம் வருடத்தின் போது., வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்., சத்யா தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை முடிவு செய்துள்ளார்.
இவரின் தற்கொலை முடிவின் படி., குழந்தை ஹாசினி மற்றும் ஒன்றரை மாத குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து உள்ள நிலையில்., இரண்டு குழந்தையும் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்துள்ளனர். தாயாரும் உயிருக்காக போராடிக்கொண்டு இருந்துள்ளார். இவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில்., இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும்., சத்யா தீவிர சிகிச்சைகளுக்கு பின்னர் உயிருடன் பிழைத்துக்கொண்டார். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.
இதனையடுத்து குழந்தையின் தாயார் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., நீதிமன்றத்தில் சமர்பித்ததை அடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்., இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணையானது நீதிபதியின் முன்னிலையில் வந்ததை அடுத்து., சத்யாவிற்கு ஆறு வருடங்கள் சிறை தண்டனை விதித்தும்., ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும்., இந்த வழக்கு விசாரணையின் போதே மற்றொரு பெண் குழந்தையையும் சத்யா பெற்றெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
in vellore mother killed baby court order jail