மழை காரணமாக பள்ளி., கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! மாவட்ட ஆட்சியர் அதிரடி.!!
In thiruvannamalai district school and college leave
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியவை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தெற்கு இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குமரி கடலை நோக்கி நகரும்.
வரும் 30, 31 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை செய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில்., இன்று அதிகாலை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில்., திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்து வந்துள்ளது. இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியரும் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும்., கனமழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
Tamil online news Today News in Tamil
English Summary
In thiruvannamalai district school and college leave