கள்ளக்காதல் மோகம்.. கணவன் தலையில் கல்லைப்போட்டு கொலை.. மகளை காப்பாற்ற என்று கபடநாடகம்.. சேலத்தில் பேரதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரை அடுத்துள்ள ஜலகண்டபுரம் ஆடவத்தூர் பகுதியை சார்ந்தவர் படவெட்டி (வயது 40). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் நிலா (வயது 35). இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

இந்த நிலையில், நிலா தனது தாயாரின் இல்லத்தில் வைத்து விசைத்தறி அமைத்து நெசவுத்தொழில் செய்து வந்துள்ளார். கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பிரிந்துள்ளனர். 

இந்த நேரத்தில், கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக நிலா தனது மாமியாரின் இல்லத்திற்கு சென்று கணவருடன் சேர்ந்து வாழலாம் என்று கூறிய நிலையில், இதனை ஏற்ற படவெட்டி மனைவியுடன் குடும்பம் நடத்த வந்துள்ளார். 

இதே தருணத்தில், நேற்று நள்ளிரவு நேரத்தில் படவெட்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த நிலையில், இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் படவெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளையில், முதற்கட்ட தகவலாக படவெட்டி மதுபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், மகளை காப்பாற்ற கணவரை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. 

இந்த விஷயத்தில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்ததும், கள்ளக்காதல் தொடர்பான விபரம் தெரியவந்த கணவனை ஆத்திரமடைந்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam husband murder by wife due to illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->