காவல் அதிகாரிக்கே மசாஜ் செய்ய மெசேஜ் அனுப்பிய விபச்சார கும்பல்.! மடமடவென விரைந்ததால் பதறிப்போன சோகம்.!!
in Madurai prostitution gang arrest by police
இந்தியாவில் உள்ள மும்பை மற்றும் டெல்லி போன்ற நகர்களில் மசாஜ் செண்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலானது நடைபெற்று வந்தது. இந்த நிலையில்., இது போன்ற பாலியல் தொழில் நடைபெறும் மசாஜ் செண்டர்கள் சிறு நகரிலும் வந்துள்ளது. இந்த விஷயம் தற்போது வெளியுலகத்திற்கு தெரியவந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொழிலானது இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரினில் நடைபெற்று வரும் நிலையில்., மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பாலியல் தொழிலிற்காகவே., ரெட் லைட் ஏரியா என்ற நகரும் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயமாகும்.
தமிழகத்தில் பாலியல் தொழிலுக்கு அனுமதியில்லாத நிலையில்., தமிழகம் போன்ற பல மாநிலங்களிலும் பாலியல் தொழிலுக்கு அனுமதி இல்லை. இந்த விஷயத்தால்., பாலியல் தொழிலை நடத்தும் கும்பல் திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது. இவர்களின் திட்டப்படி வெளியே மசாஜ் செண்டர் போல வடிவமைத்து., மசாஜ் செண்டருக்கு உள்ளே பாலியல் தொழிலை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் இணையதளம் மூலமாக பல விதமான விளம்பரத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்., மதுரை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவை சார்ந்த காவலராக பணியாற்றி வருபவரின் பெயர் பழனிக்குமார். இவரின் அலைபேசி எண்ணிற்கு "பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமா?" என்று இணைய செயலியின் மூலமாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இந்த குறுஞ்செய்தியில்., ஒரு மணி நேரம் என்றால் ரூ.4 ஆயிரம் என்றும்., முழு இரவு நேரத்திற்கு ரூ.12 ஆயிரம் என்றும் வந்துள்ளது. இதனையடுத்து தன்னை ஒரு வாடிக்கையாளராக பாவித்து கொண்ட அதிகாரி., வாடிக்கையாளர் போல மசாஜ் செண்டரின் இருப்பிடத்தை அறிந்துள்ளார். இதற்கு பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு., பாலியல் தொழில் நடத்தும் இடத்திற்கு சென்றுள்ளார்.
பாலியல் தொழில் செய்து வந்த இடத்தில் இருந்த ஐயனார்., சேகர்., மனோஜ் குமார் மற்றும் நந்தினியை கண்டு கொண்ட காவல் துறை அதிகாரி., தூரமாக காத்துகொண்டு இருந்த காவல் துறையினருக்கு ரகசிய தகவலை அனுப்பியுள்ளார். தகவலை பெற்றதும் அதிரடியாக விரைந்த காவல் துறையினர்., அனைவரையும் கைது செய்தனர்.
இதனையடுத்து இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., மசாஜ் செண்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்ததும்., இது போன்று மசாஜ் செண்டருக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Madurai prostitution gang arrest by police