மதுபானக்கடையை மீண்டும் திறக்கக்கூறி மதுபிரியர்கள் போர்க்கொடி..!!
in Madurai drunker strike about reopen wine shop
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் பாலமேடு பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வந்தது. இந்த மதுபானக்கடை கடந்த 3 மாதமாக செயல்பட்டு வந்த நிலையில், இப்பகுதி மக்கள் கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
மேலும், மகளிர் அமைப்பினர் சார்பாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, மதுபானக்கடையை மூட வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து மதுபான கடை நேற்று மதியம் 12 மணிக்கு வழக்கம்போல திறக்கப்படாமல் பூட்டி இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மதுபான பிரியர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, மதுபான பிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
பின்னர் காவல் துறையினரின் உதவியுடன் மற்றொரு கடைக்கு மதுபானங்கள் மாற்றப்பட்டதை அடுத்து, மதுபானம் வாங்க சுமார் 6 கிமீ தொலைவில் உள்ள அலங்காநல்லூருக்கு செல்லவேண்டி உள்ளதாக கூறி மதுபான பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Madurai drunker strike about reopen wine shop