நாடக காதலால் ஏமாந்தேன்.. என்னை அனுபவித்து தூக்கி எறிந்தான்.. பெற்றோரின் பேச்சை கேட்கவில்லையே..!! தீக்குளித்து தற்கொலை செய்த ஆசிரியர்.!!
in krishnagiri girl attempt suicide due to drama love
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் அருகேயுள்ள மலையாண்டள்ளி பகுதியை சார்ந்தவர் பெருமாள். இவரது மகளின் பெயர் கிருத்திகா (பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்தவர் பிரபு. பிரபுவும் - கிருத்திகாவும் கடந்த சில வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., இவர்களின் காதல் விவகாரமானது பெற்றோருக்கு தெரியவரவே., கிருத்திகாவின் பெற்றோர் இதனை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனையடுத்து அடிக்கடி காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்து., அங்குள்ள பல பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்த சமயத்தில்., இருவரும் முடிவெடுத்து திருமணம் செய்துகொள்ளுமாறு கிருத்திகா கூறியுள்ளார்.
இதனையடுத்து காதலன் உல்லாசமாக இருக்க கூறியதை அடுத்து., காதல் திருமணம் செய்துகொள்வான் என்ற நம்பிக்கையுடன் காதலனின் ஆசைக்கு இணங்கியுள்ளார். இந்த நிலையில்., மீண்டும் திருமணம் செய்து கொள்ள கூறி கிருத்திகா வற்புறுத்தி வந்த நிலையில்., பிரபு ரூ.10 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட பிரபு திருமணம் செய்யாமல்., இதனைப்போன்றே பல முறை பணம் வாங்கி ஏமாற்றியுள்ளான். இந்த நிலையில்., மீண்டும் வழக்கம்போல 2 ஆம் தேதி கிருத்திகா பிரபுவிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய நிலையில்., இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு., பணத்தை தராமல் விட்டால் இருவரின் நெருக்க புகைப்படத்தை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இதனை கேட்டு மனமுடைந்த கிருத்திகா., தான் ஏமாற்றப்பட்டு இருக்கும் நிலையை உணர்ந்து., பெற்றோரின் வார்த்தைகளை மதிக்காத எனக்கு நேர்ந்த துயரத்தை யாரிடம் சொல்லி அழுவது., சுகத்தை அனுபவித்துவிட்டு என்னை ஏமாற்றிவிட்டானே" என்று எண்ணி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடல் முழுவதும் தீப்பற்றி எறிந்த நிலையில்., அலறித்துடித்த பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., மேல் சிகிச்சைக்காக சேலம் அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நாடக காம காதலன் கொடூரன் பிரபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in krishnagiri girl attempt suicide due to drama love