அதிமுக பிரமுகர் கொடூர கொலை... கோவில்பட்டியில் பரபரப்பு.!!
in kovilpatti admk party member murder
தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் கோவில்பட்டி அருகே சங்கரலிங்க புரத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கோவில்பட்டி நகராட்சியில் 5-ஆவது வார்டு அதிமுக பிரதிநிதியாக இருக்கின்றார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர்.
நேற்றிரவு பாலமுருகன் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது சங்கரலிங்கபுரம் அருகே இருக்கும் கோயில் முன்பு அவரை சிலர் வழிமறித்து கரும்பால் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.
இதன்காரணமாக வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து இருக்கின்றார். அதன்பின்னர் அந்த மர்ம கும்பல் பாலமுருகனை சரமாரியாக அரிவாளால் வெட்டி இருக்கின்றது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, கோவில்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்த அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் அவர் தீவிரமாக பணியாற்றி இருக்கிறார். எனவே, முன்விரோதம் காரணமாக பாலமுருகன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in kovilpatti admk party member murder