மனைவியின் மீதுள்ள கோபத்தால் 9 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர கணவன்.!! இறுதியில் குழந்தைக்கு அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள பெண்ணொருவர் தனது கணவரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருந்த விஷயத்தை அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு காவல் துறையினர் உள்ளாகியுள்ளனர். 

அந்த புகார் மனுவில் கடந்த ஜூன் 17 ஆம் தேதியன்று மதியம் எனது கணவரும் நானும் சண்டையிட்டு கொண்டு இருந்தோம். எங்களின் சண்டை வாக்குவாதமாக மரியாதையை அடுத்து நான் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன். 

அந்த சமயத்தில் எனது மகளும் - கணவரும் வீட்டில் இருந்த நிலையில்., எனது மகளை எனது கணவன் என் மீதுள்ள கோபத்தில் அடித்து துன்புறுத்தியுள்ளான். இதனை நான் எதிர்த்து கேட்ட போது நீ கேள்வி கேட்டால் அடிப்பேன் என்று கூறினான். 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நான் சம்பவ இடத்தை விட்டு புறப்படவே., எனது மகளை கட்டாயப்படுத்தி கொடூர முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனை அறியாத குழந்தையின் பாட்டி வீட்டிற்கு வெளியே இருக்கவே., எனது கணவன் என் மகளை சீரழித்து வீட்டை விட்டு வெளியேறினான். 

எனது கணவனின் கொடுரதை தாங்க இயலாத என் மகள் நிற்க கூட முடியாமல் வீட்டிற்கு வெளியே வந்து பாட்டியிடம் நடந்ததை கூறி வலிக்கிறது என்று கதறி அழுதாள். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இது குறித்து என்னிடம் தெரிவிக்கவே., எனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டேன். 

எனது கணவனின் மீது தகுந்த நடவடிக்கையை காவல் துறையினர் எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதை அடுத்து., மனைவியின் மீதுள்ள ஆத்திரத்தில் குழந்தையை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Gujarat girl rapped by her father sexual harassment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->