15 வயது சிறுமியை கட்டிப்பிடித்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காமுகன்.. கோவையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியை சார்ந்த 10 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நபரின் பெயர் அருண்குமார் (வயது 35). 

சிறுமியின் தந்தைக்கு அருண்குமார் நன்றாக தெரிந்தவர் என்பதால் சிறுமியிடம் அவ்வப்போது நலம் விசாரிப்பது போல காமுகன் அருண்குமார் பேசி வந்துள்ளான். மேலும், சிறுமியின் இல்லத்திற்கு செல்லும் நேரத்திலும் பேசி வந்துள்ளான். 

இந்நிலையில், சிறுமி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாது தனியாக இருந்த நிலையில், இதனை அறிந்த அருண்குமார் வீட்டிற்கு சென்று சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் தோலை கொடுத்துள்ளான். இவனது பிடியில் இருந்து தப்பித்த சிறுமி செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி, இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இதனை பயன்படுத்த நினைத்த காமுகன், சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது இடைமறித்து தொல்லை கொடுத்துள்ளான். 

இவனது நடவடிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து கொண்டே செல்ல, ஆத்திரமடைந்த சிறுமி பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Coimbatore girl sexual torture police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->