கொடுத்த கடனை திரும்பி கேட்ட நபரை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்.! அப்பாவும் - மகனுமாக அரங்கேற்றிய அட்டூழியம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னை உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவரின் பெயர் மூர்த்தி. திமுக 114 ஆவது வார்டு உறுப்பினர் கண்ணனின் மகன் கவிதரன். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். 

இந்த நிலையில்., இவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டதை அடுத்து., இருவரும் நல்ல தோழர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில்., திமுக பிரமுகரின் மகனான கவிதரனிற்கு - மூர்த்தி ரூ.1 இலட்சம் கடனாக வழங்கியுள்ளார். 

விரைவில் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறிய கவிதரன்., இரண்டு வருடங்கள் ஆகியும் கடனை திரும்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். மேலும்., கொடுத்த கடனை மூர்த்தி கேட்கவே., அப்பாவும் - மகனுமான சேர்ந்து மூர்த்தியை தாக்கியுள்ளனர். 

arrest,

இதனால் காயமடைந்த மூர்த்தி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு., இது குறித்து அங்குள்ள திருவெல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணைக்கு பின்னர் கல்லூரி மாணவரான கவிதரன் மற்றும் திமுக பிரமுகர் கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி., விசாரணைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து., இருவரும் காவல் துறையினரால் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.   

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai dmk party member attack men


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->