திமுக, காங்கிரஸ் கூட்டணி பிளக்கின்றதா..? டெல்லிக்கு சென்று வந்த அழகிரி பரபரப்பு பேட்டி.!
in Chennai dmk congress alliance should not have any problem
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி," டெல்லியில் காங்கிரஸ் தலைவரிடம் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றேன்.
துரைமுருகன் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொண்ட பின் அது குறித்து கருத்து தெரிவிக்கின்றேன். எங்களது அறிக்கை உள்ளாட்சித் தேர்தல் குறித்து தான். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கும் சம்பந்தம் அறிக்கைக்கும் சம்மந்தம் இல்லை. இது
திமுக காங்கிரஸ், மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க கூடிய கூட்டணி கொள்கையோடு தான் இணைந்து இருக்கின்றோம். அறிக்கை யாருக்கும் எதிரானது அல்ல.
அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஸ்டாலினுடன் நல்ல நட்பு உண்டு. புரிதலும் உண்டு. இரு கட்சிகளிலும் கீழ் நிலையில் இருப்பவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருக்கின்றது. ஆதங்கமும் இருக்கின்றது. இடங்களை கொடுக்க முடியாமல் அவர்களும் சிரமப்படுவதை பார்க்க முடிகிறது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை." என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai dmk congress alliance should not have any problem