வெளிநாட்டு மாணவியின் வாழ்க்கையை சீரழித்த சென்னை தொழிலதிபர்.! புகார் கடிதத்தில் பேரதிர்ச்சி உண்மை.!!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியை சார்ந்தவர் ருமையாஸ் அகமது. இவர் பிரபல தொழிலதிபராக இருக்கும் நிலையில்., அடிக்கடி தொழில் விஷயமாக துபாய்க்கு சென்று வருவது வழக்கம். 

இந்த தருணத்தில்., துபாயில் மேரி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 22 வயதுடைய இளம் பெண்ணுக்கும் - அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும்., மேரி லிதுனியா நாட்டினைச் சார்ந்தவர்., படிப்பிற்காக துபாயில் தங்கியிருந்துள்ளார். 

இவர்கள் இருவரும் முதலில் நண்பர்களாக பழகிய நிலையில்., பின்னர் இருவருக்கும் இடையே நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்துள்ளனர். இவர்களின் காதல் வளர்ச்சியை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணம் குறித்து பேசியுள்ளனர். 

இந்த சமயத்தில்., ஆசை வார்த்தையை கூறிய அகமது மேரியுடன் உல்லாசமாக இருந்த நிலையில்., பின்னர் அவருடன் பேசாமல் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மேரி திடீரென கர்ப்பமாகவே., அவர் சென்னை வந்து இது குறித்து தெரிவித்துள்ளார். 

sexual harassment, sexual abuse,

இவரின் கருவை கலைக்க சொல்லி அகமதுவின் குடும்பத்தார் வற்புறுத்தியதன் பேரில்., தனியார் மருத்துவனையில் கருவை கலைத்துள்ளார். இதற்குப் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய நிலையில்., காதலியை கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி மீண்டும் உல்லாசம் அனுபவித்துள்ளார். 

இந்த நிலையில் மீண்டும் மேரி கர்ப்பமாகவே., திருமணம் செய்ய அகமது மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளான மேரி., அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததை அடுத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக இருக்கும் அகமதுவை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai business man rapped student police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->